வேட்டையாட வந்த 3 பேர் ஏர்கன் துப்பாக்கியுடன் கைது

கைது

Update: 2024-08-18 04:53 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று காலை பொருவலுார் மோடாங்கல் மலை அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில்,காருடன் நின்ற மூவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த பிச்சை சவுரி மகன் ஆல்பர்ட்,35; மூங்கில்துறைப்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் கோவிந்தசாமி மகன் மேகநாதன்,25; தேவி நகர் முத்தமிழன்,25; என்பதும், மூவரும் வன விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாட ஏர்கன் துப்பாக்கியுடன் வந்திருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கி மற்றும் மாருதி ஸ்விப்ட் டிசையர் காரையும் பறிமுதல் செய்தனர்.

Similar News