கோபிச்செட்டிப்பாளையம் அருகே நூற்பாலையில் திருடிய 3 பேர் கைது
கோபிச்செட்டிப்பாளையம் அருகே நூற்பாலையில் திருடிய 3 பேர் கைது;
கோபிச்செட்டிப்பாளையம் அருகே நூற்பாலையில் திருடிய 3 பேர் கைது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூர் யூனிட் நகரில் செயல்படாத நூற்பாலை உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த நூற்பாலையில் உள்ள உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு பொருட்களை 3 பேர் திருடி கொண்டிருந்தனர். இதை அந்த வழி அந்த 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து சிறுவலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசார ணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள கலைஞர் நகரை சேர்ந்த கவிராஜ் (வயது 27). சோளங்கபாளையம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (19), திருப்பூர் மாவட்டம் கலை ஞர் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இதில் மனோஜ் மீது ஏற்கனவே சிவகிரி போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதைத் தொ டர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.