நகை கடை கொள்ளை : 3 பேர் கைது 

கன்னியாகுமரி;

Update: 2025-03-30 03:05 GMT
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நகை கடை உடைக்கப்பட்டு 55 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இக் கொள்ளையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருட்டு போன 55 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள்  மீட்கப்பட்டது. இதுகுறித்து குமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் கூறியதாவது: அஞ்சுகிராமம்  என் எஸ் மணி ஜூவல்லரியில் கடையின் உரிமையாளர் கடந்த 16ஆம் தேதி இரவு கடையை மூடிவிட்டு அடுத்த நாள் வந்து பார்த்த போது கடை உடைக்கப்பட்டு 55 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.    விசாரணையில் 200 க்கும் மேற்பட்ட சிசி டிவி காட்சிகளை ஆராய்ந்து, தொழில்நுட்ப உதவியுடன் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.   கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது புன்னார்குளம் பகுதியை சேர்ந்த அஜித்(29),  அசோக்(24), சுரேஷ்(23) ஆகிய 3 பேர் என தெரிய வந்தது. உடனடியாக தனிப்படையினர் இக்கொள்ளையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருட்டு போன 55 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் மொத்தமும் மீட்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ததுடன் 100 சதவீதம் கொள்ளை போன பொருட்களை மீட்டதற்காக கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார், அஞ்சுகிராமம் எஸ்ஐ ஆறுமுகம் மற்றும் தனிப்படையினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News