ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதி இன்றி பட்டாசு தயாரித்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வெடிபொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....*

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதி இன்றி பட்டாசு தயாரித்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வெடிபொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....*;

Update: 2025-04-06 04:45 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதி இன்றி பட்டாசு தயாரித்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வெடிபொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் உள்ளது சேது நாராயணபுரம் கிராமம். இக்கிராமமானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ளது.இங்குள்ள சின்ன குட்டம் பகுதியில் தங்கேஸ்வரன் என்ற தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் சிலர். முறைகேடாக பட்டாசு தயாரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து வத்திராயிருப்பு காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் இன்று மாலை சோதனை நடத்தினார். அப்போது உரிய அனுமதியின்றி தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை கொண்டு பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஏசுதாஸ், மாரிமுத்து மற்றும் மாந்தோப்பு உரிமையாளர் தங்கேஸ்வரன் உள்ளிட்ட மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சல்பர் மூடை, வெடி உப்பு மூடை உள்ளிட்ட பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பட்டாசுகள் தயாரிப்பதற்கு தற்போது ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளதால் இது மாதிரியான முறைகேடான பட்டாசு தயாரிப்பு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருவதாகவும் இது மாதிரியான முறைகேடான செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News