பல்லவராயன் பட்டியில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ .3 லட்சம் மோசடி

வழக்குப்பதிவு;

Update: 2025-04-21 13:21 GMT
பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த்(21). இவர் தன்னிடம் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தில்லைராஜா மற்றும் சென்னையைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக தேனி எஸ்.பி இடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின் பெயரில் கோம்பை போலீசார் நேற்று (ஏப்.20) மோசடியில் ஈடுபட்ட இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News