பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில் தனித்தனியே 3 பிரிவுகளில் ஓவிய போட்டிகள் 04.01.2025 அன்று நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில் தனித்தனியே 3 பிரிவுகளில் ஓவிய போட்டிகள் 04.01.2025 அன்று நடைபெற உள்ளது.;

Update: 2025-01-02 10:52 GMT
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தைத் திங்கள் தமிழர் பண்பாட்டு மாதத்தையொட்டி தமிழரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு - பண்பாடும் பெருமிதங்களும் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில் தனித்தனியே 3 பிரிவுகளில் ஓவிய போட்டிகள் 04.01.2025 அன்று நடைபெற உள்ளது. இப்போட்டிகள் அருப்புக்கோட்டை அல் அமீன் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிவகாசி எஸ்.ஹெச்.என்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 04.01.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.15,000-மும், இரண்டாம் பரிசு ரூ.12,000-மும், மூன்றாம் பரிசு ரூ.10,000- மும் , ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 10 ஓவியங்களுக்கு தலா ரூ.2000- பரிசாக வழங்கப்படும். மேலும் இந்த போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களைக் கொண்டு தமிழர் பண்பாட்டு ஓவிய கண்காட்சி நடத்தப்படும். எனவே மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இப்போட்டிகள் குறித்த விவரங்களுக்கு 93616 13548 மற்றும் 86675 73086 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News