நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் மார்ச் 30இல் யுகாதி பெருவிழா!

மார்ச் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 95 கிளைச் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும்.;

Update: 2025-03-27 14:41 GMT
நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் மார்ச் 30இல் யுகாதி பெருவிழா!
  • whatsapp icon
நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் வருகிற மார்ச் 30ம் தேதி யுகாதி என்கிற தெலுங்கு வருடப் பிறப்பு விழா நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட நாயுடு நல சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும், யுகாதி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யுகாதி என்கிற தெலுங்கு வருடப் பிறப்பு விழா, வருகிற மார்ச் 30ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் ஆண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள SPS திருமண மண்டபத்தில் காலை 8 மணிக்கு யுகாதி விழா துவங்குகிறது.
நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கத்தை நிறுவிய அட்வகேட் தா.ஜெயராமுலு நாயுடு அவர்களின் நூற்றாண்டு விழா நடைப்பெறுகிறது,அதனைத் தொடர்ந்து மணமாலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் சுமார் 700 மணமகன், மணமகள் ஜாதகங்கள் இடம் பெறும். காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 95 கிளைச் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும்
மாலை 3 மணி முதல் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி, பாட்டுப் போட்டி, நடனப்போட்டி மற்றும் மகளிருக்கான கோலப் போட்டியும் நடைபெறும். தொடர்ந்து, சென்ற கல்வியாண்டில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். 27ம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இருந்து நாயுடு சமூக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேச உள்ளனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்க தலைவர் ஆடிட்டர் வெங்கடசுப்ரமணியன். செயலாளர் நாராயாணன்,பொருளாளர் தங்கவேல், தலைமை நிலைய செயலாளர் கோவிந்தராஜு,துணைத்தலைவர் ஏ.வி.ஆர். வெங்கடேசன்,துணைச்செயலாளர்கள் ரோகிணி செல்வராஜ், தனபால் ,இளைஞர் அணி நிர்வாகிகள் சக்தி வெங்கடேஷ், சதீஷ்குமார்,வெங்கடாசலம், ஜெகதீசன் , அன்பழகன், கோவிந்தசாமி, மகளிர் அணி ரேகா, ஜெயலட்சுமி, ஜோதிலட்சுமி, ராதாபாய், உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், கிளைச் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Similar News