பட்ட பகலில் பூட்டை உடைத்து 30சவரன் தங்க நகை 1 கிலோ வெள்ளி கொள்ளை

மீஞ்சூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் பட்ட பகலில் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகை 60 ஆயிரம் ரூபாய் பணம் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

Update: 2024-09-27 06:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மீஞ்சூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் பட்ட பகலில் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகை 60 ஆயிரம் ரூபாய் பணம் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சீமாவரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் விநாயகம் அவரது மனைவி சாந்தி இருவரும் வீட்டினை பூட்டி விட்டு பணிக்கு சென்றிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகை 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் இது குறித்து விநாயகம் அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் காவல் துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை தேடி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனர் வீட்டில் குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் பட்ட பகலில் பூட்டை உடைத்து நடைபெற்ற கொலை சம்பவம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Similar News