குழந்தை பிறப்பு பதிவு வரும் 31 கடைசி நாள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழ் பதிவேற்றம் வருகின்ற 31ஆம் தேதி கடைசி நாள்;
தமிழ்நாடு பிறப்பு, இறப்பு விதிகள் 2000ன் படி, குழந்தை பிறந்த 15 ஆண்டுகளுக்குள், பிறப்பு சன்றிதழில் பெயர் பதிவு செய்வது கட்டாயம்.இந்த விதி, 2025 ஜன., 1 முதல் நடைமுறைக்கு வரஉள்ளது. எனவே, 2000 ஜன., 1-க்கு முன் பிறந்தவர்கள், இந்த விதி நடைமுறைக்கு வந்துவிட்டால், பிறப்பு சன்றிதழில் பெயர் பதிவு செய்ய முடியாது. எனவே, 2009ம் ஆண்டும், அதற்கு முன் பிறந்தவர்களும், வரும் 31-ம் தேதிக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், உத்திரமேரூர் சுகாதார வட்டாரத்தில் உள்ள மானாம்பதி,உத்திரமேரூர், சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு விளம்பர பதாகை வைக்கப்பட்டு உள்ளது.