அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்- 34 பயனாளிகளுக்கு ரூ சுமார் 72 லட்சம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்- 34 பயனாளிகளுக்கு ரூ சுமார் 72 லட்சம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.

Update: 2024-09-24 10:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்- 34 பயனாளிகளுக்கு ரூ சுமார் 72 லட்சம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 34 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்கு, தலா ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் வீதம்,ரூபாய் 71 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பிலான ஆணைகளை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, கிருஷ்ணராயபுரம் நகர செயலாளர் சசிகுமார், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேது மணி மகாலிங்கம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள், அரசு துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Similar News