பல்லடம் அருகே உயிரிழந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு.

உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை.

Update: 2024-09-13 12:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பல்லடம் மங்கலம் சாலை அரசங்காடு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் உயிரிழந்த நிலையில் இருந்த ஆணின் சடலத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்த நபரின் பெயர் அசோக் குமார் 38 என்பதும் கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவியை விட்டு பிரிந்து பச்சாபாளையத்தில் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக்குமார் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News