மணவூரில் திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Update: 2024-09-17 07:58 GMT

பிடிபட்ட திருடன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவள்ளூர் மாவட்டம் மணவூரில் வீடுகள் மற்றும் கடைகளை இன்று அதிகாலை உடைத்து கொள்ளை அடித்த திருடனை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்தனர்,



 



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா மணவூர் ரயில் நிலையம் அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் ஆகியவற்றில் இன்று அதிகாலை மர்ம நபர் உடைத்து கொள்ளையடிப்பதை அப்பகுதி பொதுமக்கள் நேரடியாக பார்த்து தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்ததையடுத்து ஒன்று திரண்ட பொதுமக்கள்

கொள்ளையடித்து கொண்டு இருந்த திருடனை கையும் களவுமாக பிடித்து

தர்ம அடி கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாலங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடித்த திருடனை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து, சி.சி.டி.வி யில் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்த பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. ஆனால்

இந்தப் பகுதிகளில் இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் வருவதே இல்லை என்று குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன் வைத்துள்ளனர். இந்நிலையில் திருடனை பொதுமக்கள் இன்று கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Tags:    

Similar News