ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 39 மாடுகள் போலீசார் மீட்பு வழக்கு பதிவு செய்து விசாரணை

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 39 மாடுகள் போலீசார் மீட்பு வழக்கு பதிவு செய்து விசாரணை;

Update: 2025-03-21 05:29 GMT
ஆத்தூர் சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையின் போது ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 39 மாடுகள் போலீசார் மீட்பு வழக்கு பதிவு செய்து விசாரணை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டைனர் லாரி மூலம் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு மாடுகள் கடத்தப்படுவதாக அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் ரகசிய தகவல் வந்ததன் பேரில் இரவு அச்சரப்பாக்கம் போலீசார் ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது கண்டெய்னர் லாரியில் 33 கறவை பசு மாடுகளும் 6 எருமை மாடுகளும் கண்டெய்னர் லாரியில் கடத்தி வரபட்டதை அச்சரபாக்கம் போலீசார். லாரியை சோதனை செய்ததில் மாடுகளுக்கு தண்ணீரோ தீவனமோ இல்லாமலும் காற்றோட்டம் இல்லாத வாகனத்தில் அடைத்து கடத்தப்பட்டது. 39 மாடுகளை மீட்டனர்.இந்தக் கடத்தல் சம்பந்தமாக லாரி உரிமையாளர் சம்சுதீன் லாரி ஓட்டுநர் சண்முக சுந்தரம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News