தேனி புதிய பேருந்து நிலையத்தில் 40 ஆயிரம் ரூபாய் திருட்டு தேனி போலீசார் விசாரணை

விசாரணை;

Update: 2025-03-03 13:59 GMT
தேனி, குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை. இவர் சம்பவ நாளன்று தனது அண்ணன் இறப்பிற்கு செல்வதற்காக ரூ.40,000 எடுத்துச் சென்றார். தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் திருச்சி செல்லும் பஸ்சில் ஏறினார். டிக்கெட் எடுத்த போது பணம் திருடு போனது தெரிய வந்தது. திருட்டு குறித்து தேனி போலீசார் நேற்று (மார்.2) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News