பெட்டிக் கடையில் 42 கிலோ போதை பொருள், ஒருவர் கைது

ரூ. 17,000 மதிப்புள்ள 42 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2025-05-19 06:24 GMT
பெட்டிக் கடையில் 42 கிலோ போதை பொருள், ஒருவர் கைது பெரம்பலூரில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பசேரோ பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் ஆலத்தூர் கிழக்கு தெருவில் வசிக்கும் ராஜா(33) என்பவரது கடையில் ரூ. 17,000 மதிப்புள்ள 42 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பாடாலூர் போலீசார் ராஜா மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Similar News