வேளாங்கண்ணி மாதா 44 ஆம் ஆண்டு நவநாள் கொடியேற்று விழா

96 கிராமங்களில் தாய் கிராமமான திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித அன்னை வேளாங்கண்ணி மாதா 44 ஆம் ஆண்டு நவநாள் கொடியேற்று விழா விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-08-30 02:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் அருகே உள்ள 96 கிராமங்களில் தாய் கிராமமாக விளங்கும் மேட்டுப்பட்டி புனித அன்னை வேளாங்கண்ணி மாதா44 ஆம் ஆண்டு சிறப்பு நவநாள் கொடியேற்று விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக புனித வியாகுல அன்னை பேராலயத்தில் இருந்து மாதாவின் திருவுருவம் பதித்த கொடியினை பங்கு தந்தை செல்வராஜ் ஆசீர்வதித்து மேட்டுப்பட்டி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து வேளாங்கண்ணி மாதா ஆலயம் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து கொடியினை அர்ச்சிப்பு செய்து வான வேடிக்கைகள் முழங்க, மலர்களை தூவி புனித அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மின் தேர் பவனி மாதாவின் பிறந்த தினத்தன்று விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நவநாள் கொடியேற்று நிகழ்ச்சியில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News