இன்னர்வீல் சங்கம் சார்பில் ஆசிரியர் தினவிழா..

இன்னர்வீல் சங்கம் சார்பில் ஆசிரியர் தினவிழா.

Update: 2024-09-14 09:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் இன்னர்வீல் சங்கம் சார்பில் ஸ்ரீ அருள்மிகு வெங்கடேஸ்வரா பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் ஆசான் அண்ணல் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட ஆசிரியர்கள். விழாவில் இன்னர் வீல் சங்கத் தலைவர் சுதாமனோகரன் தலைமை வகித்தார். வெங்கடேஸ்வரா நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரெ.உமா தேவிவரவேற்றார். விழாவில் நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 12 ஆசிரியர்களுக்கு "ஆசான் அண்ணல் " விருது வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் எம்.செல்வம், ஸ்ரீ அருள்மிகு வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன செயலாளர் க.சிதம்பரம் ஆகியோர் ஆசான் விருதினை ஆசிரியர்களுக்கு வழங்கி கெளரவித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் கு.பாரதி கலந்து கொண்டு பேசினார். இந்த ஆண்டின் நல்லாசிரியர் விருது பெற்ற வி.நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் வே.லட்சுமி , அன்பு ஆசிரியர் விருது பெற்ற கொல்லிமலையை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரும் பராட்டி கெளரவிக்கப்பட்டனர். இன்னர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் தெய்வானை ராமசாமி, இன்னர் வீல் சங்கச் செயலர் சிவலீலா ஜோதி, மாவட்ட துணைத் தலைவர் மல்லிகா வெங்கடாஜலம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் செல்லதுரை, பால்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News