திருப்பூரில் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு மௌன அஞ்சலி ஊர்வலம்!

திருப்பூரில் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு அனைத்து கட்சியினர் மௌன ஊர்வலம்!

Update: 2024-09-14 10:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு அனைத்து கட்சியினர் மௌன அஞ்சலி ஊர்வலம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று  உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு திருப்பூர் குமரன் சிலையிலிருந்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் விடுதலை சிறுத்தை, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து மௌன அஞ்சலி ஊர்வலம் சென்றனர். குமரன் சிலை துவங்கி மாநகராட்சி வரையிலும் நடைபெற்ற இந்த மௌன அஞ்சலி ஊர்வலத்தில் மறைந்த சீதாராம் யெச்சூரி அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து கைகளில் ஏந்திய படி கொண்டு சென்று மாநகராட்சி முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது பின்னர் ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

Similar News