சேலம் மாநகராட்சி 45-வது வார்டுக்குட்பட்ட கிச்சிப்பாளையம் மயானம், காந்திபஜார், சலவையர் காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆணையாளர் இளங்கோவன் நேரில் பார்வையிட்டு திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது அவர் ‘மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் உதவி ஆணையாளர் வேடியப்பன், செயற்பொறியாளர் செந்தில்குமார், கவுன்சிலர் சுகாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.