துணிக்கடையை உடைத்து ரூ.45 ஆயிரம் பணம், துணி கொள்ளை

திண்டுக்கல்;

Update: 2025-12-17 08:01 GMT
துணிக்கடையை உடைத்து ரூ.45 ஆயிரம் பணம், துணி கொள்ளை திண்டுக்கல், பழனிரோடு, முருகபவனத்தில் அமைந்துள்ள சகாயராணி என்பவருக்கு சொந்தமான S.M.ஜவுளி கடையின் மேற்கூரையை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து ரூ.45 ஆயிரம் பணம், சேலை, லெக்கின்ஸ் உள்ளிட்ட துணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா சார்பு ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்

Similar News