சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்
சேலம் கோர்ட்டில் தீர்ப்பு;
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி தனியாக இருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூங்காவனத்தை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி பூங்காவனத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.