சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

வழக்கு;

Update: 2025-06-15 04:33 GMT
கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் வெங்கடேசன், 27; இவர், கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த ஒரு வாரத்திலேயே வெங்கடேசன் சிங்கப்பூருக்கு சென்றதால், சிறுமி தந்தை வீட்டில் உள்ளார்.இது குறித்து தகவலறிந்த சின்னசேலம் மகளிர் ஊர் நல அலுவலர் கண்ணம்மா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த வெங்கடேசன், இவரது தந்தை கோவிந்தன், தாய் அங்கம்மாள் மற்றும் சிறுமியின் பெற்றோர் உட்பட 5 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News