ராசிபுரம் அருகே 50 ஆண்டு பழமையான மரம் சாலையில் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..
ராசிபுரம் அருகே 50 ஆண்டு பழமையான மரம் சாலையில் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - சென்னை சாலையில் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் மலை அடிவாரத்தில் உள்ளது. இந்த அடிவாரப் பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. அதில், சுமார் 50 ஆண்டு வயதுடைய ஆயமரம் ஒன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் அடியோடு சாலையில் பெயர்ந்து விழுந்தது. அப்பகுதியாக வழியாகச் சென்றவர்கள் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விழுந்த மரத்தின் கிளைகளை இயந்திரம் மூலம் அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மண்ணில் ஈரப்பதம் அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில் காற்று சற்று அதிகமாக வீசியதால் மரம் அடியோடு பெயர்ந்து சாலையில் விழுந்துள்ளது.