அரசுமருத்துவகல்லூரி முன்பு 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

வேடசந்தூர் திமுக பிரமுகர் கொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முன்பாக 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல். சாலை மறியலால் போக்குவரத்து அரை மணி நேரம் ஸ்தம்பித்தது

Update: 2024-09-27 10:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் மாசி என்ற மாசி பெரியண்ணா. இவர் நேற்று வேடசந்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்டு, திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கூடியிருந்த திமுகவினர் மற்றும் உறவினர்கள் திடீரென உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மருத்துவமனை முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அண்ணா சிலை, காமராஜர் சிலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்வதை கண்டு, அப்பகுதிகளுக்கும் சென்று வாகனங்கள் செல்ல விடாமல் மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன போக்குவரத்தை மாற்றம் செய்து அனுப்பினார்கள். பின்னர் காவல்துறை அதிகாரிகள் மறியல் செய்தவர்களிடம் உண்மை குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதி அளித்ததால் தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Similar News