ராமநாதபுரம் குப்பைக்கு வைத்த தீயால் சுமார் 500க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் பனை மரங்கள் நாசம்
முத்துப்பேட்டையில் உள்ள தென்னந்தோப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 500க்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்து நாசம் மூன்று தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணி தீவிரம்.;
ராமநாதபுரம்மாவட்டம்முத்துப்பேட்டையில் உள்ள தென்னந்தோப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 500க்கும் மேற்பட்ட மரங்கள் தோப்பில் இருந்த குடிசை உள்ளிட்டவைகள் எரிந்து நாசமானது. மூன்று தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த முத்துப்பேட்டையில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மதியம் தீ விபத்து ஏற்பட்டு தீ மளமலைவென பரவி கடற்கரை அருகே உள்ள தோப்பு வரை தீ பரவியது. இந்த தீ விபத்தில் இரண்டு தோப்புகளுக்கு மேல் தீ பரவியது, இந்த தீ விபத்தில் தோப்பில் இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசமானதுடன் தோப்பில் இருந்த குடிசை ஒன்றும் எரிந்தது. அக்கம் பக்கத்தில் வீடுகள் எதுவும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் கடற்கரை ஓரம் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வந்ததையடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நான்கு திசைகளும் தீ அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை முழுமையாக தெரியவில்லை, எனினும் தோப்பில் உள்ள பழைய மட்டைகளை சேர்த்து எரித்த போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீ கொழுந்து விட்டு எரிந்ததால் முத்துப்பேட்டை கிராம பகுதிகளில் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.