பரமத்தி வேலூரில் ரூ. 5.77 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்.
பரமத்தி வேலூரில் ரூ. 5.77 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் போனது.;
பரமத்தி வேலூர், செப். 16: பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனைக் கூடத்தில் செவ் வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில், ரூ. 5 லட் சத்து 77 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு, 8,061 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனர். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 82.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 56.59-க்கும், சராசரியாக ரூ.73.50-க் கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 5 லட்சத்து 77 ஆயிரத்து 134-க்கு தேங்காய் ஏலம் போனது. தேங்காய் விலை உயர்வடைந்ததால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.