சிறுமியை திருமணம் செய்து 6 மாத கர்ப்பிணியாக்கிய வாலிபருக்கு போக்சோ வழக்கு

விருத்தாசலம் போலீசார் விசாரணை

Update: 2024-09-11 17:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பாலகுரு (18). இவர் விருத்தாசலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு அவருடன் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார் இதில் சிறுமி தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சிறுமி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாலகுருவை குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News