வெள்ளகோவில் அருகே லாரி பேருந்து மோதி விபத்து - 6 வயது சிறுவன் உட்பட இருவர் பலி 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவில் குருக்கத்தியில் நின்றுகொண்டிருந்த லாரியில் அரசு பஸ் மோதி விபத்து. 6 வயது சிறுவன் மற்றும் ஒருவர் பலி.வெள்ளகோவில் காவல்துறை விசாரணை;

Update: 2025-06-06 15:50 GMT
காங்கேயம் வெள்ளகோவில் அடுத்துள்ளது குருக்கத்தி. திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலை ஆகும். இங்கு நேற்று இரவு திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்தது.அப்போது குருக்கத்தி பகுதியில் கல்லக்குடியில் இருந்து டால்மியா சிமெண்ட் ஏற்றிக்கொண்டு கோவையில் இறக்குவதற்காக சென்ற லாரி  ரோட்டில் எந்தவித சிக்னலும் போடாமல் நிறுத்தி இருந்ததால் பின்னால் வந்த அரசு பேருந்து லாரியின் வலது பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்தில் இடது புற நான்கு சீட்டில் உட்கார்ந்து வந்தவர்களுக்கு பலத்த  காயம் ஏற்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம்‌ காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு வரும் வழியில் திருச்சி ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பவின் (6), கும்பகோணத்தை சேர்ந்த செந்தழிழ்ச்செல்வன் (50) என் இருவர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 1.செந்தமிழ் செல்வன் (35) 2.பாலசுப்பிரமணி (50), 3.வீரம்மாள்(40), 4.ஜெகதீஷ்(42),5. கிரிஷ்(14), 6.முத்துலட்சுமி(40), 7.செல்வி(45), 8.சண்முகம்(45), 9.சுதா (35), 10. வள்ளிக்கண்ணு(46), 11.மதிவாணன் (38), மற்றும் பெயர் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உட்பட 12 நபர்கள் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்கு திருப்பூர் மற்றும் கோவை மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வெள்ளகோவில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி இருவர் பலியானது காங்கேயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News