கந்திகுப்பம் அருகே சீட்டாட்டம் ஆடியவர்களின் 6 ஈடுவீலர்கள் பறிமுதல்
கந்திகுப்பம் அருகே சீட்டாட்டம் ஆடியவர்களின் 6 வீலர்கள் பறிமுதல்;
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் போலீசாருக்கு மருதேப்பள்ளி பாரதகோவில் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக வந்த தகவலின் பேரில் நேற்று போலீசார் ரோந்து பயணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சமுதாய கூடம் பின்புறம் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்துஅவர்கள் தப்பினர். இதை அடுத்து அங்கு இருந்த 6 டூவீலர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 11 பேரை போலீசார் தேடி வருகினறனர்.