ராஜபாளையம் அருகே ஏலக்காய் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சியதுடன் வனவிலங்கு வேட்டையாடி வந்த 6 பேரை அதிரடியாக கைது செய்து 2 நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல்

ராஜபாளையம் அருகே ஏலக்காய் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சியதுடன் வனவிலங்கு வேட்டையாடி வந்த 6 பேரை அதிரடியாக கைது செய்து 2 நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறை.....தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு...*;

Update: 2025-08-27 06:05 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஏலக்காய் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சியதுடன் வனவிலங்கு வேட்டையாடி வந்த 6 பேரை அதிரடியாக கைது செய்து 2 நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறை.....தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு... விருதுநகர் மாவட்டம் சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் சூரியன்கல் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் ஏலக்காய், கிராம்பு உட்பட நறுமணப் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றது. இந்த எஸ்டேட்டை தேவதானத்தைச் சேர்ந்த கடற்கரை (வயது 60) என்பவர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்துள்ளார். இவரது மகன்களான சண்முககுமார் (40) செல்வகுமார்( 30) மற்றும் சிவகிரியை சேர்ந்த தங்கப்பாண்டியன் (வயது 20) மாரியப்பன், ராஜபாளையம் திருவள்ளுவர் தெரு வேங்கை ஆகியோரும் தோட்ட வேலை பார்த்துள்ளனர். மேலும் எஸ்டேட் தோட்டத்தின் காவலாளியாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ஊமைத்துரை வயது 55 என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் 7 பேரும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி மான், காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வனவர் கனகராஜ் தலைமையில் வனக் குழுவினர் அந்த பகுதிக்கு ரோந்து சென்று பார்த்த போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதுடன் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த 5 லிட்டர் சாராய ஊறல், 2 நாட்டுத் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்து பறிமுதல் செய்த நாட்டு துப்பாக்கியை சேத்தூர் போலீஸ் நிலையத்திலும், பறிமுதல் செய்த கள்ளச்சாராயத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீசாரிடமும் ஒப்படைத்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய வேங்கை என்பவரை வனத்துறையுடன் இணைந்து போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News