திருச்செந்தூர் கடல் 60 அடி தூரம் உள்வாங்கியது!

திருச்செந்தூர் கடல் 60 அடி தூரம் உள்வாங்கியது!;

Update: 2025-05-27 02:34 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சுமார் 60 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பானது. இந்நிலையில் இன்று தொடங்கி நாளை வரை அமாவாசை உள்ளது. இதன் காரணமாக திருச்செந்தூர் கடல் இன்று காலையில் சுமார் 60 அடியில் இருந்து 100 அடி வரை உள்வாங்கியும், வெளியே வருவதுமாக உள்ளது. ஆனாலும் பக்தர்கள் எவ்வித அச்சமும் இன்றி கடலில் இறங்கி புனித நீராடி வருகின்றனர்.

Similar News