மணல் கடத்திய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்

பறிமுதல்;

Update: 2025-02-02 04:09 GMT
உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் ஆற்றில் மணல் திருடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து திருநாவலூர் சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு மணல் ஏற்றிக் கொண்டிருந்த மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர். ஆனால் மாட்டு வண்டி உரிமையாளர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் போலீசார் மணல் கடத்திய 7 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News