வரதட்சணை : கணவருக்கு 7 ஆண்டு சிறை

இரணியல்;

Update: 2025-03-25 02:44 GMT
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சிங்காராயன் மகன் பிரான்சிஸ். கொத்தனார்.  இவருக்கும் அழகன்பாறை பகுதியை சேர்ந்த மேரி லீமா ரோஸ் என்பவருக்கும் கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு பிரான்சிஸ் கூடுதலாக ரூ. 50,000 வரதட்சனை கேட்டு மேரி லீமாரோசை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.      இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, இந்த புகார் சம்மமந்தமாக பிரான்சிஸ், அவரது தாயார் அமலபுஷ்பம், தம்பி சாந்தப்பன், தந்தை சிங்காராயன், சகோதரிகள் சகாயராணி, மிக்கேல் ராணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.        இந்த விசாரணை இரணியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி அமிர்தீன் தீர்ப்பு வழங்கினார். அதில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதம்,  வரதட்சனை கேட்டு வாங்கியதற்கு 2 வருட சிறை தண்டனை ரூ.5 ஆயிரம், வரதட்சணை திருப்பி கொடுக்காததற்கு 2 வருட சிறை தண்டனையும் ரூ.5,000 என மொத்தம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை ரூ. 20 ஆயிரம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறியுள்ளார்.

Similar News