இராசிபுரத்தில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 7 வாகனங்கள் சிறை பிடிப்பு..

இராசிபுரத்தில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 7 வாகனங்கள் சிறை பிடிப்பு..;

Update: 2025-08-29 15:07 GMT
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாமக்கல் வடக்கு அதன் பகுதி அலுவலகமான ராசிபுரம் பகுதி அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் M.பதுவைநாதன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் A.செல்வகுமார் அவர்கள் ராசிபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டார். அப்போது இதில், தகுதி சான்று புதுப்பிக்கப்படாத 5 டாட்டா ஏஸ் வாகனங்களும், 2 பயணியர் ஆட்டோ ரிக்சாக்கள் சிறைபிடிக்கப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் ராசிபுரத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளது, அதேபோன்று அனுமதிக்கு புறம்பாக அதிக பாரம் ஏற்றி இயக்கப்பட்ட 5 கனரக சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இச்சிறப்பு தணிக்கை மூலம் அரசுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் இணக்க கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று சிறப்பு வாகன தணிக்கை, இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, ஆயில் பட்டி, மங்களபுரம், வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு M.பதுவைநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News