ஸ்கூட்டரில் இருந்த ரூ.75 ஆயிரம் அபேஸ்

அபேஸ்

Update: 2024-08-18 04:35 GMT
ஸ்கூட்டரில் இருந்த ரூ.75 ஆயிரம் பணத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். உளுந்துார்பேட்டை, பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்,56; உளுந்துார்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று வங்கியில் ரூ.75 ஆயிரம் பணம் கட்டுவதற்காக தனது ஸ்கூட்டர் சீட்டின் அடியில் வைத்துச் சென்றார். மதியம் 2:00 மணிக்கு சென்னை சாலையில் உள்ள ஓட்டல் முன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரில் வைத்திருந்த பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News