பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது.

கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.;

Update: 2025-06-29 11:32 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் பெரம்பலூர் உட்கோட்டம் அரும்பாவூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட வேப்பந்தட்டை to அன்னமங்கலம் செல்லும் ரோட்டில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே கண்ணன் (62) என்பவர் தனக்கு சொந்தமான பெட்டி கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர் மேற்படி எதிரியை கைது செய்து அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அரும்பாவூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள் மேற்படி எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 1.ஹான்ஸ் (3.200 கிலோ கிராம்), 2.கூல்லீப் (340-கிராம்), 3.விமல் பாக்கு (3.225-கிலோ கிராம்) மற்றும் 4.V1-பான் மசாலா (1.260-கிலோ கிராம்) என மொத்தம்- 8.025 கிலோ கிராம்* ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News