பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.83,86,493 உண்டியல் காணிக்கை

பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.83,86,493 உண்டியல் காணிக்கை

Update: 2024-08-01 23:36 GMT
பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.83,86,493 உண்டியல் காணிக்கை ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் 20 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணி பண்ணாரி அம்மன் கோவில் செயல் அதிகாரி மேனகா முன்னிலையில் நடந்தது. இதில் பரம்பரை அறங்காவலர்கள், பக்தர்கள், வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு காணிக்கைகளை எண்ணினர். இதில் காணிக்கையாக ரூ.83 லட்சத்து 86 ஆயிரத்து 493-ஐ பக்தர்கள் செலுத்தி இருந்தனர். மேலும் 336 கிராம் தங்கம், 945 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது.

Similar News