நாமக்கல் மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க, 9 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு மாவட்ட ஆட்சியர் தகவல்.

நாமக்கல் மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரித்திட 9 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.;

Update: 2025-04-28 08:32 GMT
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், காலநிலை மாற்றம் குறித்த திறன் பயிற்சி நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது: ஊரக வளர்ச்சி துறை சார்பில் இயற்கையை பாதுகாக்கும் வகையில் பசுமைபரப்பை அதிகரித்திட மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், குட்டைகள் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் வருகிறது. காலநிலைமாற்றம் காரணமாக அதிக மழைப்பொழிவு, அதிகவெப்பம் காரணமாக பல்லுயிர் பரிணாமத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு பல்வேறு புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. இதனை முற்றிலும் குறைத்திட வேண்டும்.இச்சூழலில் மாசுபாட்டை சமன் செய்திட இயற்கை வளத்தை மேம்படுத்திட அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 15 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது.இதை 33 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே, அனைத்து துறையினரும் வனத்துறையுடன் இணைந்து அதிக அளவில் மரக்கன்றுகள் பராமரிக்கவேண்டும். பசுமை நட்டு பரப்பை அதிகரித்தால் மட்டுமே காலநிலை சீராக அமையும். நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவுசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுவட்டாரஅளவிலும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பிலும் நர்சரி அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்திசெய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக 6 அடிக்கு மேல் வளர்ந்த மரக்கன்றுகள் சாலை ஓரங்களில் நடப்பட்டு 3 ஆண்டுகள் வரை பராமரிக்கவேண்டும்.அதிகளவில் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் வருங்காலத்தில் குடிக்க சுத்தமான குடிநீர் கிடைக்கும். சுகாதாரமான காற்றோட்டம் அமையும். எனவே அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து நாமக்கல் மாவட்டத்தின் பசுமைபரப்பை அதிகரித்து முன்மாதிரி மாவட்டவாக உருவாக்கிட வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், உதவி திட்ட அலுவலர் அன்புச்செல்வன்,நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லு தாவரவியல் துறை இணைப் பேராசிரியா வெஸ்லி, உதவி சந்திரசேகரன் உள்ளிட்ட பேராசிரியர் பலர்நிகழ்ச்சியில் கலந்தகொண்டனர்.

Similar News