காவல்துறை திமுகவின் ஒரு துறையாக செயல்படுகிறது-MR விஜயபாஸ்கர் கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்.
காவல்துறை திமுகவின் ஒரு துறையாக செயல்படுகிறது-MR விஜயபாஸ்கர் கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்.;
காவல்துறை திமுகவின் ஒரு துறையாக செயல்படுகிறது-MR விஜயபாஸ்கர் கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார். கரூர் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று தனது வழக்கறிஞர் அணி உடன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை வழங்கினார். அதில் கரூர் மாவட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை திட்டமிட்டு பொய் புகார் கூறி வழக்கு பதிவு செய்ய போவதாக காவல்துறை மிரட்டுவதாக கூறி மனு வழங்கினார். மேலும் அதிமுக நிர்வாகிகளை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தரைக்குறைவாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதாகவும் இதை அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அந்த மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை திமுகவின் ஒரு துறையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.