இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்!

திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-04-27 12:20 GMT

பீடி இலை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கணேசபுரம் பகுதியில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், தலைமை காவலர் ராமர், இருதயராஜ், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் நேற்று ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமாக சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக 42 மூடை பீடி இலைகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த சுமார் 1,250 கிலோ பீடி இலைகளை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக ஆலந்தலையைச் சேர்ந்த தொம்மை மகன் ராஜா (29), வாகனத்தை ஓட்டிவந்த தூத்துக்குடி எஸ்எஸ் மாணிக்கபுரத்தைச் சேர்ந்த வேல் மகன் பாலமுருகன் (35) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News