குரூப்-4 தோ்வுக்கு திருச்சியில் 100 நாள்கள் சிறப்புப் பயிற்சி: ஆட்சியா் அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தவுள்ள குரூப்-4 பணியிடங்களுக்கான தோ்வுக்கு திருச்சியில் கட்டணம் இல்லாமல் 100 நாள்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.;
திருச்சி மாவட்ட ஆட்சியர்
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது டிஎன்பிஎஸ்சியால் 6244 காலிப்பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள திருச்சி மாவட்டத்தினா் இந்தப் போட்டித் தோ்வை சிறப்பாக எதிா்கொள்ளும் வகையில் கட்டணமில்லா 100 நாள் சிறப்புப் பயிற்சி திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது.
இப் பயிற்சி வகுப்பில் சிறப்பு பயிற்றுநா்களை கொண்டு பயிற்சியளிப்பதுடன், மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டு இலவச பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். எனவே, திருச்சி மாவட்ட தோ்வா்கள் இப்பயிற்சியில் சோ்ந்து பயன்பெற வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0431-2413510, 94990-55901, 94990-55902 ஆகிய எண்களிலோ, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அணுகி தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.