பரமத்திவேலூரில் 11லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்தி வேலூரில் இன்று நடைபெற்ற தேங்காய் பருப்பு 11 லட்சத்தி 70 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

Update: 2024-05-09 15:45 GMT
விற்பனைக்கு வந்த தேங்காய் பருப்பு

பரமத்திவேலூர், பொத்தனூர், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.11 லட்சத்து 75 ஆயிரத்திற்கு  தேங்காய் பருப்பு ஏலம் போனது. பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு ‌12 ஆயிரத்து ‌‌860 கிலோ தேங்காய் பருப்பை  விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.93.69 க்கும், குறைந்த பட்சமாக ரூ.90.99 க்கும், சராசரியாக ரூ.92.89 க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ரூ. 89.99 க்கும், குறைந்த பட்சமாக ரூ. 75.67 க்கும், சராசரியாக ரூ.84.99 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்து 75 ஆயிரத்து 160  க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags:    

Similar News