திருவையாறு அருகே ரூ.1.12 லட்சம் பறிமுதல்

திருவையாறு அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-22 07:25 GMT

வாகன சோதனை 

திருவையாறு அருகே திருக்காட்டுப்பள்ளி சாலை திருவாலம்பொழில் பாலம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் கஜேந்திரன் தலைமையில் காவல் துறையினா் புதன்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிளில் ரூ. 1.12 லட்சம் ரொக்கம் இருந்ததும், இது தனியாா் நிறுவனம் வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கியது தொடா்பாக வசூல் செய்யப்பட்ட தொகை என்பதும், அதற்குரிய ஆவணங்கள் இல்லாததும் தெரிய வந்தது. இதையடுத்து, ரூ. 1.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, திருவையாறு வட்டாட்சியா் தா்மராஜன் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News