வெறிநாய் கடித்து 12 பேர் காயம்!

பொன்னமராவதி அருகே உள்ள சொக்கநாதபட்டி கிராமத்தில் தெருநாய்கள் கடித்து 12 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2024-05-10 09:32 GMT

பொன்னமராவதி அருகே உள்ள சொக்கநாதபட்டி கிராமத்தில் தெருநாய்கள் கடித்து 12 பேர் காயம் அடைந்தனர்.


பொன்னமராவதி அருகே உள்ள சொக்கநாதபட்டி கிராமத்தில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கிராமத்தில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று பொதுமக்களை துரத்தி கடித்தது. இதில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் செல்வராஜ்(35), ஜெயா (35),தனலட்சுமி(30),.ராஜாமணி(45) உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

அனைவரும் வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொதுமக்களை கடித்து குதறிய வெறிநாயை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தவும், தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News