சேலத்தில் 12-ந்தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலத்தில் 12-ந்தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2024-01-05 11:57 GMT

மாவட்ட ஆட்சியர் 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் படையில் பணிபுரிவோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

மேலும், அன்றைய தினம் தொழில்முனைவோர் கருத்தரங்கு மற்றும் முப்படைவீரர் வாரிய கூட்டமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களும் தங்களது கோரிக்கைகளை இரட்டை பிரதிகளில் விண்ணப்பம் வாயிலாக நேரில் சமர்ப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பம் சமர்ப்பிக்க உள்ள முன்னாள் படைவீரர்கள் அன்றைய தினம் காலை 10 மணிக்குள் தங்களது விண்ணப்பத்தை முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News