வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுராந்தகம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-17 16:49 GMT

கஞ்சா வைத்திருந்தவர் கைது

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள படாளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நடராஜபுரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் படாளம் போலீசார் வீட்டை சோதனை செய்ததில் சுமார் 15 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இது சம்பந்தமாக ராஜேஷ்,வீரமருது, குபேந்திரன்,தினேஷ் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News