இலங்கை தமிழர்களுக்கு 152 வீடுகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டல்
இலங்கை தமிழர்களுக்கு 152 வீடுகள் கட்ட அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
By : King 24X7 News (B)
Update: 2023-11-24 11:51 GMT
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாள்புரத்தில் அமைக்கப்பெற்றுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக 80 வீடுகள் கட்ட ரூ.4.61 கோடியும், இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழவிளை இலங்கை மறுவாழ்வு முகாமில் 72 வீடுகள் ரூ.4.15 கோடி மதிப்பீட்டிலும் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.