சித்தாளந்துர் ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 15 வது ஆண்டு விழா

சித்தாளந்துர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 15 வது ஆண்டு விழா

Update: 2024-02-09 02:52 GMT

சித்தாளந்துர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 15 வது ஆண்டு விழா

திருச்செங்கோடு ஒன்றியம். சித்தளந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 15 வது ஆண்டுவிழா பள்ளி தலைமையாசிரியை திருமதி சி.பி.சாந்தி அவர்கள் தலைமையில் ‍நடைபெற்றது.இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சித்தளந்தூர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சிவக்குமார் மற்றும் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.நாமக்கல் சமூக ஆர்வலர் ஆர்.கே.மனோஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.பள்ளி ஆசிரியைகள் ராதாமணி. ஜாஸ்மின். கோகிலம். ஜெயராணி மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திவ்யா மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள். பெற்றோர்கள் .சமூக ஆர்வலர் வஜ்ரவேலு மற்றும் ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Tags:    

Similar News