பட்டாசு வெடித்ததில் 16 பேர் காயம் - அரசு மருத்துவமனை தகவல்

Update: 2023-11-13 06:04 GMT

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் பட்டாசு வெடிக்கும் போது காயம் ஏற்பட்டு 16 பேருக்கு சிகிச்சை அளிக்கபட்டதாக கோவை அரசு மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.இது குறித்து அவர்கள் வெளியிடுள்ள செய்தி குறிப்பில் புறநோயாளிகள் பிரிவில் பட்டாசு வெடிக்கும்போது காயம் அடைந்த 7 பேருக்கு சிகிச்சை அளிக்கபட்டதாகவும், காயம் அதிகமாக உள்ள 4 ஆண்கள், 1 பெண், குழந்தைகள் என 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தீபாவளி கொண்டாட்டத்தில் மொத்தம் 16 பேர் காயம் அடைந்ததாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளவர்கள் உட்பட அனைவரும் நலமுடம் இருப்பதாக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News