மின்கம்பி மரம் சாய்ந்து 2 கரவை மாடுகள் மின்சாரம் தாக்கி பலி !
மயிலாடுதுறை அருகே ஈச்சங்குடியில் மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு கரவை மாடுகளின் மீது மின் கம்பி மரம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பலி.
Update: 2024-04-26 06:39 GMT
மயிலாடுதுறை அருகே ஈச்சங்குடி பண்ணை தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ராமாமிர்தம் (70). இவர் ஆடு மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். சம்பவ தினத்தன்று இவரது இரண்டு கறவை மாடுகள் அவருக்கு சொந்தமான வயலில் மேய்ந்து கொண்டிருந்தன, அந்த நேரத்தில் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் திடீரென்று கீழை சாய்ந்ததில் மின் கம்பிகள் 2 கரவை மாடுகள் மீது பட்டு மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலே இறந்து விட்டதன. இதைக்கண்ட ராமாமிர்தம் பெரம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் , பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து போன இரண்டு மாடுகளையும் பரிசோதனைக்கு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 மாடுகளின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் ஆகும்.